தமிழ்நாட்டின் கோயில் நகரம் காஞ்சிபுரம். வைணவத்தின் திவ்ய தேசத்தையும் சைவ சமயத்தின் பாடல் பெற்ற ஸ்தலத்தையும் நாம் இங்கே காணலாம். கும்பகோணத்தில் உள்ள சோழர்களின் கோயில்களைப் பற்றி நான் முன்பு எழுதியுள்ளேன், ஆனால் இங்கே பல்லவர் வம்சத்தின் கோயில் கலைகள் அதிகம். மகேந்திரவர்மன் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களைப் பார்க்க புலிகேசிக்கு வழிகாட்டினார், நரசிம்ம வர்மன் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டினார். மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். காஞ்சிபுரத்தில் நீங்கள் தரிசிக்க வேண்டிய முதல் 10 பிரபலமான கோவில்களை இங்கே கொடுத்துள்ளேன்.

1. காமாட்சி அம்மன் கோவில்

காஞ்சிபுரம் என்று சொன்னால் அது காமாட்சி. தன்னை தரிசிக்கும் பக்தர்களை தேவி அரவணைப்பாள். தேவி அமர்ந்திருக்கும் பத்மாசன தோரணையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆதி சங்கரர் சக்தியின் தெய்வத்தை அறிந்திருந்தார் ஆதலால் தேவியின் முன் சக்கரத்தை நிறுவினார். தூய தெய்வீகத்துடன் சிவபெருமானை மணந்த பார்வதியின் வடிவமான காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு, பெண்கள் தங்கள் கணவர்களிடம் பய பக்தியுடன் இருக்க விரும்புகிறார்கள். திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பற்றி பற்றி எழுதும் போது, அம்மனின் 7 அம்சங்களைக் குறிப்பிட்டேன். அதேபோன்று காஞ்சிபுரம் காமாட்சியும், காமாட்சி, லக்ஷ்மி, பார்வதி என்று பல பெயர்களாலும், அம்சங்களாலும் போற்றப்படுகிறாள். பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் இதைத் தவிர வேறு எந்த சக்தி ஸ்தலங்களும் இல்லை. இக்கோயிலில் விநாயகர், மகிஷாசுரன், காலபைரவர் முதலான முதன்மையான தெய்வங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 850 மீ தொலைவில் உள்ளதால்  பக்தர்கள் காமாட்சி அம்மன் அருள் இல்லாமல் செல்வதில்லை.

காமாட்சி அம்மன் கோவில் நேரம் 
காலை 05.30 முதல் மதியம் 12.15 வரை
மாலை 04.00 முதல் இரவு 08.15 வரை

2. காஞ்சி கைலாசநாதர் கோவில்

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசந்தர் கோயில் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும் கும்பகோணத்தின் தாராசுரம் கோயில் நினைவுக்கு வருகிறது. சிவபெருமான் சோழர்களைக் கோயில்களைக் கட்டத் தூண்டியது மட்டுமின்றி பல்லவர்களையம் தூடியுள்ளார். இதனால் இத்தலம் சிவன் காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலின் 58 சிவாலயங்கள் என்னை, என் கண்களுக்கும் இதயத்திற்கும் இடையில் போராட வைத்தது. அவற்றை மணற்கற்களால் செதுக்கிய சிற்பியைப் பார்க்க விரும்பினேன். நான் ஏன் காஞ்சி கைலாசநாதர் கோயிலை விரும்புகிறேன் என்ற பதிவில் இதை குறிப்பிட்டுயிருக்கிறேன். கைலாசந்தர் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது. ஏராளமான வெளிநாட்டினர் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பல்லவர்கள் விலங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்ததை இக்கோயிலின் சிற்பங்கள் காட்டுகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோயில், போரின் போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான சரணாலயத்தைக் கொண்டுள்ளது. இறுதியாக, கைலாசந்தர் கோவில் பல்லவர்களின் அடையாளம்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் நேரங்கள்
காலை 09.00 முதல் மதியம் 12.30 வரை
மாலை 04.00 முதல் 06.30 வரை

3.ஏகாம்பரேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் வரும் பக்தர்கள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் கோயிலின் வரலாற்றை வழங்குகிறது. பார்வதி தேவி மாமரத்தின் அடியில் லிங்க வடிவம் முன் தவம் இருந்தாள், சிவபெருமான் தவத்தை சந்தேகித்து தவத்தை நிறுத்த கங்கையை அனுப்பினார், இறுதியில் பார்வதி விஷ்ணுவின் உதவியுடன் சிவபெருமானுடன் ஐக்கியமானார். பார்வதி தன் தவறுகளை மன்னிக்க சிவலிங்கத்தை தழுவினாள். இன்னும், கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் பார்வதி 
தழுவிய அச்சுகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள 1008 லிங்கங்களைப் பார்த்தபோது, ​​ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயனார்கள் லிங்கங்கள் மூலம் சிவனை வழிபட்டது எனக்கு நினைவுக்கு வந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள 1000 தூண்களின் அலங்காரம் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை நினைவூட்டுகிறது. இக்கோயில் பாடல் பெற்ற ஸ்தலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் இது பூமியைக் குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகும்.
ஏகாம்பரேஸ்வரர் கோவில் நேரம்  
காலை 06.00 முதல் மதியம் 12.30 வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை

4. வரதராஜப் பெருமாள் கோவில்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் வைணவர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோயில் 108 திவ்ய தேசத்தில் 43வது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவில் "பெருமாள் கோயில்" என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் காஞ்சிபுரத்திற்கு விஷ்ணு காஞ்சி என்று பெயர் வழங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அத்திவரதர் இந்தக் கோயில் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டுவரப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு, அத்தி வரதர் கோயில் குளத்திலிருந்து எழுந்தருளினார். பக்தர்கள் கோயில் மேற்கூரையில் உள்ள வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு பல்லிகளைத் தொட்டால் எதிர்மறையான விளைவுகள் நீங்கும். இக்கோயில் ஆரம்பத்தில் சோழர்களால் கட்டப்பட்டது பிறகு பிற வம்சங்களால் மேம்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கி.மீ தொலைவில் உள்ள இந்த இக்கோயில் தேவராஜசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறந்த தத்துவஞானி ராமானுஜர் இக்கோயிலில் தங்கி சில காலம் பக்தர்களிடையே வைணவத்தைப் பரப்பினார்.
வரதராஜப் பெருமாள் கோவில் நேரம் 
காலை 06.00 முதல் மதியம் 12.30 வரை
மாலை 03.30 முதல் இரவு 08.30 வரை

5. கர்ச்சபேஸ்வரர் கோவில்

கர்ச்சபேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், இது விஷ்ணுவுடன் தொடர்புடையது. வைணவம் மற்றும் சைவ பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மந்தார மலையின் நடுக்கத்திலிருந்து தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்ற விஷ்ணு கூர்ம அவதாரத்தை எடுத்தார். தேவர்களும் அசுரர்களும் மந்தாரம் மற்றும் வாசுகியின் உதவியால் கடலைக் கலக்கிக் கொண்டிருந்த போது, மந்தார மலை நிலையற்றதாக இருந்தது. விஷ்ணு தன்னை ஆமையாக மாற்றிக் கொண்டு கடலில் உள்ள மந்தார மலையின் அடியில் சென்று அதை நிலைநிறுத்தினார். இறுதியாக, அவர் தேவர்களுக்கு அமிர்தத்தைப் பெற உதவினார். சிவபெருமான் வாசுகி பாம்பின் விஷத்தை அருந்தியதால்  நீலகண்டன் என்று பெயர் பெற்றார். விஷ்ணு பகவான் இக்கோயிலில் கர்ச்சபேஸ்வரராக சிவனை வழிபட்டார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 800 மீ தொலைவில் உள்ள இக்கோயிலில் சரஸ்வதியும் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
கர்ச்சபேஸ்வரர் கோவில் நேரம் 
காலை 05.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

6. குமரகோட்டம் கோவில்

முருகப் பெருமானை வழிபடுவதன் முக்கியத்துவத்தை அறியக் கற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் கோயில். முருகப்பெருமானின் குமரக்கோட்டம் கோயிலை கண்டதும், காஞ்சிபுரத்தை ஏன் கோயில் நகரம் என்று அழைக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். விஷ்ணு மற்றும் சிவன் தவிர மற்ற தெய்வங்களும் இங்கே  உள்ளன. இக்கோயிலில் அர்ச்சகராக இருந்த கச்சியப்பரால் கந்த புராணம் வெளியிடப்பட்டது. சிறுவாபுரி, திருத்தணி, ஆண்டார்குப்பம், குன்றத்தூர் ஆகிய இடங்களில் உள்ள முருகனின் வடிவம் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். இங்கு முருகன் தனது பக்தர்களுக்கு பால சுப்ரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் பெற்றோரிடம் அதிக பாசம் கொண்டவர் என்பதால் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனாகிய பார்வதிக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கும் இடையே சோமஸ்கந்தராக வாழ்ந்து வருகிறார். கவிஞர் அருணகிரிநாதர் தனது புகழ்பெற்ற பாடல்களில் இந்த கோயில் தெய்வத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். குமரகோட்டம் கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
குமரகோட்டம் கோவில் நேரங்கள்
காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

7. உலகளந்த பெருமாள் கோவில்

காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு கோயில்கள் பெரும்பாலும், ஆழ்வார்களால் குறிப்பிடப்பட்ட 108 திவ்ய தேசத்தில் சேர்த்துள்ளது. திருக்கார்வானம், திருகாரகம், திருநீரகம், திருஊரகம் என நான்கு திவ்ய தேசங்களைக் கொண்டது இக்கோயில். உலகளந்த பெருமாள் காஞ்சிபுரத்தில் அதிகம் தரிசிக்கப்படுகிறார், ஏனெனில் இந்த கோயிலின் சிலை மற்ற விஷ்ணு கோவில்களில் இருந்து வேறுபட்டது. ஒவ்வொரு பெருமாள் கோயிலும் விஷ்ணுவின் அவதாரத்தை விளக்குகிறது, அதே போல உலகளந்த பெருமாள் கோயிலும் விஷ்ணுவின் வாமன அவதாரத்தை பிரதிபலிக்கிறது. மன்னன் மகாபலி மூன்று உலகங்களின் சக்தியைப் பெற விரும்பினான். மகாவிஷ்ணு வாமனனாகப் பிறந்து 3 அடி நிலத்தைத் தருமாறு மகாபலியிடம் கேட்டார். மஹாபலி மூன்றடி நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டார். வாமனன் ஒரு அடி பூமியிலும் மற்றொரு பாதம் வானத்திலும் அளந்து மூன்றாவது அடியை அளக்கும் போனது மகாபலி தனது தலையை மூன்றாவது அடிக்கு கொடுத்தார், பிறகு வாமனன் அவரை பூமிக்கு அடியில் புதைத்தார். இந்த சம்பவம் கோயிலின் கருவறையில் எதிரொலிக்கிறது. இக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டு இடைக்கால சோழர்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 600 மீ தொலைவில் 
உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.
உலகளந்த பெருமாள் கோயில் நேரங்கள்
காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

8. சித்ரகுப்தர் கோவில்


சித்ரகுப்தர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாகும். காஞ்சிபுரத்திற்கு வருபவர்கள் அல்லது காஞ்சிபுரம் பக்தர்கள் சித்ரகுப்தரை வணங்கி தங்கள் பாவங்களை மறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள், ஏனெனில் அவர் மனிதர்களின் நன்மை தீமைகளை கணக்கிட்டு யமனிடம் சமர்பிக்கிறார். சித்ரகுப்தரின் அறிக்கைக்குப் பிறகு அந்த நபர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பதை யமன் தீர்மானிக்கிறார். சித்ரகுப்தர் பேனாவுடன் அமர்ந்திருக்கிறார், பேனா மக்களின் பாவத்தைக் எழுதுகிறது. பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கவும், இறந்த பிறகு தங்கள் ஆத்மாக்கள் சொர்க்கத்தில் இளைப்பாறவும் சித்திரகுப்தரிடம் ஆசி பெறுகின்றனர். மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்த ஆலயம் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் இந்த தனிச்சிறப்பு வாய்ந்த தளம் அமைந்துள்ளது.
சித்ரகுப்தர் கோயில் நேரம் 
காலை 05.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை

9. வைகுண்ட பெருமாள் கோயில் 

வைகுண்டப் பெருமாள் கோயில் திரு பரமேஸ்வர விண்ணகரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் சிறப்புவாய்ந்தது. விஷ்ணுவின் மீது அதிக ஈடுபாடு கொண்ட இரண்டாம் நந்திவர்மன் என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. கோயிலின் சிங்கத் தூண்கள் வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களின் படைப்பாற்றலை தூண்டுகிறது. கோவிலின் அற்புதமான திராவிட அமைப்பு பார்வையாளர்களுக்கு அற்புதமான காட்சிகளை அளிக்கிறது. வைகுண்டப் பெருமாள் கோவிலை நான் சுற்றியபோது, ​​கலைக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினேன், அதுவே நந்திவர்மனையும் தூண்டியிருக்கக்கூடும். கோயிலுடன் பணிபுரிந்த சிற்பிகள் தங்கள் கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் ஆழமாக நிறுவியுள்ளனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 650 மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் 108 திவ்ய தேசத்தில் அடங்கியது.
வைகுண்ட பெருமாள் கோவில் நேரம் 
காலை 07.30 முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 05.00 முதல் இரவு 07.30 வரை

10. பாண்டவதூதர் பெருமாள் கோவில்

Iராமேசுவரம் கோவில் ராமாயணத்துடன் தொடர்புடையது என்று முன்பே பகிர்ந்தேன். இங்குள்ள பாண்டவ தூதர் கோவில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. விஷ்ணுவின் கிருஷ்ணஅவதாரம் கோயிலின் வரலாற்று பின்னணி. பாண்டவர்களுக்கு ஐந்து வீடுகள் தருமாறு துருயோதனின் அரசவைக்கு கிருஷ்ணர் துாதராகச் சென்றபோது, துரியோதனன் 
பொய்யான சிம்மாசனத்தை உருவாக்கினான். சிம்மாசனத்தின் அடியில் இருந்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல நினைத்தான். கிருஷ்ணர் சிம்மாசனத்தில் அமர்ந்து விஸ்வரூபமாக உருவெடுத்து அனைத்து வீரர்களையும் கொன்றார். பாண்டவர்களுக்காக தூதராக சென்றதால் பாண்டவ தூத பெருமாள் என்று பெயர் பெற்றார். இக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது மற்றும் பிற வம்சங்களால் விரிவுபடுத்தப்பட்டது. இது 108 திவ்ய தேசத்தில் அடங்கியது . காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தொலைவில் உள்ளது.
பாண்டவதூதர் பெருமாள் கோவில் நேரம் 
காலை 07.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை
மாலை 04.00 முதல் இரவு 07.30 வரை

காஞ்சிபுரத்தின் சிறப்பு
கோயில்கள், பட்டுப் புடவைகள் & இட்லி.

காஞ்சிபுரத்தில் உள்ள உணவகங்கள்
சரவண பவன், சக்தி கணபதி, மற்றும் அடையார் ஆனந்த பவன்.

காஞ்சிபுரம் கோயில்களுக்கு எப்படி செல்ல வேண்டும் 

விமானம் மூலம்
காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் 72 கிமீ தொலைவில் உள்ள சென்னை விமான நிலையம் ஆகும்.

தொடர்வண்டி மூலம்
மும்பை மதுரை வாராந்திர விரைவு ரயில், புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில் மற்றும் மும்பை நாகர்கோவில் பாலாஜி விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை, அரக்கோணம் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ரயில்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பஸ் மூலம்
சென்னை, பெங்களூர், விழுப்புரம், வேலூர், திருப்பதி மற்றும் கோயம்புத்தூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு TNSTC பேருந்துகள் உள்ளன.