உங்கள் கவனத்திற்கு வண்டி என் 12631 சென்னை எழும்பூரிலிருந்து  திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை அதிவேக விரைவு வண்டி சற்று நேரத்தில் வந்து செல்லும் என்று எங்கோ கேட்கும் ஓரு சத்தம் நம்மை உடனடியாக ரயிலில் பயணம் செய்ய தூண்டுகிறது, அப்படி உடனடியாகவும், அவசரமாகவும் இருக்குப்பிடி இல்லாமல் ரயிலில் பயணம் செய்யவே டிசம்பர் மாதம் 1997ஆம் ஆண்டு தட்கல் முன்பதிவு சேவை தொடங்கப்பட்டது (Tatkal Reservation Scheme), பின்னர் ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டு இந்த சேவையானது விரிவடைந்தது. 
 
இந்திய ரயில்வே துறைக்கு கிடைக்கும் மொத்த வருமாணத்தில் 5 சதவீதத்திற்கு மேல் கிடைக்கும் வருமாணம் ஃப்ளெக்ஸி, பிரீமியம், மற்றும் தட்கல் கட்டணத்தை சாரும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தட்கல் டிக்கெட் என்பது ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணி நேரம் முன்னதாக புக் செய்யப்படுகிறது. ரயில் நிலையங்களிலும், இணையவழி சேவை மற்றும் ஐஆர்சிடிசி(IRCTC) செயலி மூலமாகவும் தட்கல் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் ஸ்லீப்பர்(SL) வகுப்புக்கு 100 முதல் 200 ரூபாய் வரையும் ஏசி(AC) வகுப்புக்கு 300 முதல் 500 ரூபாய் வரையும் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. தினமும் காலை 10.00 மணி்ககு (2A/3A/CC/EC/3E) வகுப்புகளுக்கும், 11 மணிக்கு ஏசி அல்லாத பிற வகுப்புகளான SL/FC/2S க்கும் டிக்கெட் புக்கிங் தொடங்குகிறது 
மத்திய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்னவ் அறிவிப்பின்படி, இனி தட்கல் டிக்கேட் புக் செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் எண்னை சரிபார்த்த பின்னரே டிக்கேட் புக் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் உண்மையாக தட்கல் டிக்கெட் புக் செய்பவர்களுக்கே டிக்கெட் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இந்த முறையானது முறைகேடாக தட்கல் டிக்கெட் புக் செய்யப்படுவதையும் தடுக்ககூடும் என்றும் நம்பப்படுகிறது. இனி எப்பொழுதும் போல உங்களாள் தட்கல் டிக்கேட் புக் செய்ய முடியாது, ஆகவே ஐலை மாதம் முதல் ஆதார் எண்னை சரிபார்த்து, அதாவது (e-Aadhaar Authentication) முறையில் தட்கல் டிக்கெட் புக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.