நான் கோயில்களையும் அதன் சிலைகளின் வடிவமைப்புகளையும் சுற்றி பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். கலை மற்றும் ஆன்மீகத்தில் ஒரு போதும்  திருப்தி அடைந்ததே இல்லை. ஆனால் ஒருமுறை கும்பகோணம் தாராசுரம் கோயில் என்னை வியப்படைய செய்தது. நான் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசந்தர் கோயிலுக்குச் சென்றபோது, ​​அங்குக் கலையும் ஆன்மீகமும் இணைந்ததை உணர்ந்தேன், அது ஏன் பிரபஞ்ச மலையின் இறைவன் என்று அழைக்கப்படுகிறது என்று நான் நம்பினேன். காஞ்சிபுரத்தில் ஏறக்குறைய ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன ஆனால் கைலாசநாதர் கோயில் அனைத்துக்கும் சமமானது, மேலும் இது எனது பதிவுகளில் ஒன்றான " காஞ்சிபுரத்தில் உள்ள சிறந்த 10 கோயில்கள்" என்ற பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலே உள்ள படம் கோயிலின் சன்னதிகளைக் காட்டுகிறது.

பல்லவர்களின் சாதனை




பல்லவர்கள் ஆண்ட காலத்தில், காஞ்சிபுரம் அவர்களின் தலைநகராக இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. கைலாசந்தர் கோயில் பல்லவர்களின் கலையை நினைவூட்டுகிறது. போரின்போது அவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள் என்பதைக் கூறும் ஒரு ரகசிய குகையும் உள்ளது. பார்வையாளர்கள் குகைக்குள் நுழையப் போது. ஒரு நபர் ஒரு முனையில் குழந்தையாக நுழைந்து மற்றொரு முனையிலிருந்து வயதானவராக வெளியில் வருவார் என்ற தத்துவத்தை விளக்குகிறது. நான் குகைக்குள் நுழைந்து வரும்போது, கோயிலின் கடவுளான சிவபெருமானுக்குப் பின்னால் வந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். இந்தச் சாதனை 7ஆம் நூற்றாண்டின் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனுக்குச் சொந்தமானது என்பது எனக்குத் தெரிய வந்தது.

கோயிலின் கலை

பாறைகள் மகாபலிபுரத்தின் கதையை முன்பே எழுதியிருக்கிறேன். ஆனால் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரத்தின் மணற்கல். கோயிலின் 58 சிவாலயங்கள் பல்லவர்களை மதிக்கத் தூண்டியது. கோயிலின் விலங்குச் சிற்பங்கள் பல்லவர்களை ரசிக்கத் தூண்டியது. இந்தச் சிற்பங்களைச் செதுக்கியவர் யார் என்று பார்க்க ஆசைப்பட்டேன், நரசிம்மவர்மன் இந்தப் படைப்புகளை எவ்வாறு மேற்பார்வையிட்டார் என்று கற்பனை செய்து பார்த்தேன். இந்தக் கேள்விகளை, நான் கோயிலைச் சுற்றி வரும்போது கேட்டுக்கொண்டிந்தேன். அழகான பெண்களைப் பார்க்கும்போது ஆண்கள் அமைதியாக இருக்க முடியுமோ? அதே போலக் கைலாசந்தர் கோயிலின் சிலைகளைப் பார்க்கும்போது அமைதியாக இருக்க முடியாமல் தவித்தேன். நான் கோயிலுக்குச் சென்றபிறகு. தமிழ் மொழியில் மட்டும் நாம் சிறந்தவர்கள் அல்ல, சிற்பங்களிலும் தமிழன் மேலோங்கி நிற்கின்றான் என்பதை அறிந்தேன். அதற்குச் சான்றே வெளிநாட்டிலிருந்து இக்கோயிலுக்கு வரும் பார்வையாளர்கள். இது எல்லாம் பல்லவர்களின் கலை. கைலாசநாதர் கோயிலுக்குச் செல்பவன் கவிஞனாகிறான் என்பதை உணர்தேன்.

கைலாசநாதர் கோயிலின் சிறப்பு
காஸ்மிக் மலையின் இறைவன்

கைலாசநாதர் கோயில் நேரம் 
காலை 09.00 முதல் மதியம் 12.30 வரை 
மாலை 04.00 முதல் மாலை 06.30 வரை

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம்
கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் 69 கிமீ தொலைவில் உள்ள சென்னை விமான நிலையம் ஆகும்.

ரயில்
கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம் ரயில் நிலையம் ஆகும், இது 2.7 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து 
கைலாசநாதர் கோயிலின் அருகில் உள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகும், இது 2 கிமீ தொலைவில் உள்ளது.

கைலாசநாதர் கோவில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது